சிறிலங்காவில் மேலும் நூற்றுக் கணக்கானவர்களுக்குத் தொற்று!மொத்தம் 40,000ஐ நெருங்கியது

நாட்டில் இன்று மட்டும் 461 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 692ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 771 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 31 ஆயிரத்து 339 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.