நத்தார் தினத்தில் காணாமல் போன குடும்பஸ்தர்: சடலமாக மீட்கப்பட்ட துயரம்

கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி, காணாமல் போன குடும்பதஸ்தரின் சடலம், கடற்படையினரின் உதவியுடன் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.

நேற்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில், குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்று, அதில் இறங்கியபோது நீரில் மூழ்கி, காணமல்போயுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதேச மக்களினால் தேடும் பணி நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று, காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், கிளிநொச்சி- கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த இரத்தினம் லோகிதன் (வயது-27) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.