யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரி ஒருவருடன் நேரடித் தொடர்புடைய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 426 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.