செனட் தேர்தல் அடியின் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்

நாட்டின் செனட் தேர்தலில் ஒரு முக்கிய ஆசனத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் பாராளுமன்றத்தில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சிறிய பாராளுமன்றக் குழுக்களின் ஆதரவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.

ஆனால் சீர்திருத்தங்களைக் கையாளும் சட்டத்தின் முக்கிய பகுதிகளை நிறைவேற்ற செனட்டில் அல்லது பாராளுமன்றத்தின் மேல் சபையில் அதற்கு பெரும்பான்மை இல்லை.

இந் நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் 96 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டின் 48 இடங்களுக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் மாகாண சபைகளிலும், தேசிய சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தின் கீழ் சபையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன, ஆனால் நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தேசிய சட்டமன்றத்தில் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி ஒரு பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது.

அங்கு எதிர்க்கட்சி வேட்பாளர் பி.டி.ஐ.கட்சியின் அப்துல் ஹபீஸ், ஷேக்கை தோற்கடித்தார்.

வாக்கெடுப்பில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி.) அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, தற்போது நாட்டின் நிதியமைச்சராக பணியாற்றி வரும் ஷேக் 169 முதல் 164 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கானின் பி.டி.ஐ.க்கு அவரது கட்சியும் அதன் கூட்டாளிகளும் தேசிய சட்டமன்றத்தை கட்டுப்படுத்துவதால் இதன் விளைவாக ஒரு அடி ஏற்பட்டது.

அந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பி.டி.ஐ மூத்த தலைவரும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருமான ஷா மெஹ்மூத் குரேஷி தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அதன்போத‍ே இம்ரான் கான் நாட்டின் பாராளுமன்றத்தில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று கூறினார்.