சட்டத்துக்குப் புறம்பாக சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 படகுகளில் தொழிலில் ஈடுபட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த 14 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 14 பேரும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்பபடைக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் 14 பேரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.