பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது: கல்வி அமைச்சர்

எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

 

எதிர்வரும் இரு வாரங்களுக்கு பல்கலைக்கழங்களை மீளத் திறப்பதை ஒத்தி வைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த இரு மாதங்களின் பின்னர் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.