திறைசேரி இருந்து மேலதிக நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவு றுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் வழங்கியமையால், புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எனவே தற்போதுள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி சேவைகளை முன்னெடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வருமானம் சரிந்துள்ளன, ஆனால் அதை நிர்வகிக்க முடியும் என்றார்.