யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக, டீக்கடை திறந்துள்ள நயன்தாரா!

பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் உள்ளவரை சினிமாவில் காலத்தை தாட்டுவார்கள். மார்க்கெட் இல்லாத காலத்தில் சீரியல்களில் நடிப்பது, விளம்பரங்களில் நடிப்பது என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள ஹீரோயின்கள் மார்க்கெட் உள்ள போதே, அடுத்தடுத்து எதிர்காலத்திற்க்கு தேவையான பேக்கப்பை தயார் செய்து கொள்கிறார்கள். சிலர் அழகு சாதன பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்துகிறார்கள். சிலர் தனியாக பார்லர் ஆரம்பித்து அதனை பெரிய அளவில் கொண்டு செல்கிறார்கள்.

 

இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் துறையில் முதலீடு செய்கிறார்கள். டாப்ஸி போன்ற ஹீரோயின்கள் என்னதான் பாலிவுட்டில் பிசியாக இருந்தாலும் கூட, தொழில் துறையிலும் சிங்கிளாக சிங்க பெண்ணாக கலக்கி வருகிறார்கள்.

 

இப்படி பல ஹீரோயின்கள் தொழில்துறையில் கலக்கி வருகிறார்கள். அந்தவகையில் நடிகை நயன்தாராவும் தொழிலில் இறங்கியுள்ளார். முதலீடு செய்ய எத்தனையோ துறை இருக்கும்போது, நயன்தாரா தேர்ந்தெடுத்த துறை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. டீக்கடையில் முதலீடு செய்துள்ளார்களாம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். சாய்வால் டீக்கடையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் பெயர் பெற்றது.

 

அந்த டீக்கடைக்குள் நுழைந்தால், அந்த சூழலை ரசிக்கவே ஒரு மணிநேரம் போதாதாம். அந்த டீக்கடைக்குள் டீ குடிக்க செல்வோரை காட்டிலும், அந்த இடத்தை ரசிக்க செல்வோர் தான் அதிகமாம். அந்த டீக்கடையில் தான் நயன்தாரா முதிலீடு செய்துள்ளாராம். முதலீடு செய்ய எத்தனையோ தொழில் இருக்கும்போது எதற்காக டீக்கடை மீது முதலீடு செய்ய வேண்டும்? என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. முன்னாள் முதல்வர், இந்நாள் பிரதமர் என சிலர் டீக்கடையில் இருந்து தானே வாழ்க்கையை துவங்கினார்கள்? அதனால் கூட டீக்கடை மீது ஆர்வம் வந்திருக்கலாம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சார்ந்தவர்கள்.