பிரித்தானியாவை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 98,515 பேருக்கு பாதிப்பு

லண்டன்-
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதியாகிறது.
நேற்றும் இங்கிலாந்தில் 98,515 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 143 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99.61 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 21 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது. உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும், வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் கூடக் கூடாது என உத்தரவிடப்பட்டது.