சிறைச்சாலை கைதிகளுக்கு பூஸ்டர் டோஸ்

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (29) முதல் கொழும்பு வெலிக்கடை, கொழும்பு புதிய மெகசின், நீர்கொழும்பு, வடரெகா மற்றும் மஹர சிறைச்சாலைகளில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள 18,453 கைதிகளுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.