2020ம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது- மகிந்த

2020ம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் கடன்நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்தது,எனினும் 2020ற்க்கான கடன்களை செலுத்திவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே இதனை செய்ய முடிந்தது,அரசாங்கம் தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்ததுடன் தேவையற்ற வெளிநாட்டு கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.