நீரில் மூழ்கி காணாமல்போன ‘எண்டூரன்ஸ்’ என்ற கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1915 பெப்ரவரியில் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த மரக்கப்பல் வெட்டல் கடலில் மூழ்கியதிலிருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நிலையில் தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியான வெட்டல் கடலின் 9,868 அடி (3,008 மீட்டர்) ஆழத்தில் கப்பல் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஃபாக்லாண்ட்ஸ் கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.