யாழ். கந்தரோடையில் புத்தர் சிலை

யாழ். கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது என அப்பகுதி இளைஞர்களால் பாராளுமன்ற  உறுப்பினரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து,  வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச்சென்று இன்று வெள்ளிக்கிழமை நிலைமைகளை அவதானித்துள்ளார் குறிப்பாக அங்கு நின்றிருந்த பொளத்த மதகுருவிடம் வினவியிருந்தார்.

 

குறித்த சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.