நாட்டின் தற்போதை அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து நீக்கி விட்டு, மக்கள் சார்பான அரசாங்கம் நாட்டிற்குள் ஆட்சியமைக்கும் வரை ஒரு டொலர் பணத்தை கூட நாட்டுக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்துள்ளதாக மாற்றத்திற்கான வெளிநாடு வாழ் இலங்கையர்கள் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு.
ஜனாதிபதி நாட்டுக்கு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக மாற்றவர்கள் மீது குற்றத்தை சுமத்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்புச் சபையின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வது ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டு, இதற்கான அரசாங்கத்தின் தீர்வுகள் என்ன என்பதை நாட்டுக்கு கூறி இருக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தமை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பாமை மற்றும் நாட்டு மக்கள் தமது பொறுப்புகளை தட்டிகழித்தமை போன்ற காரணங்களினால், நாட்டின் தற்போதைய நெருக்கடி ஏற்படவில்லை.