வவுனியாவிலிருந்து றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 3 பேரைக் காணவில்லை

நுவரெலியா – றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போனவர்களில் 2 பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.