பொன்சேகாவை தாக்க முற்பட்ட ஹரின் – ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தி இன்று நடத்திய மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹரின் பெர்னாண்டோ, பொன்சேகாவை ஆபாச வார்த்தைகளை கூறி தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தில் சரத் பொன்சேகா உரையாற்றுவதற்கு உரையொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா மற்றும்ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இது தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சில ஊடக அறிக்கைகளின்படி, பொன்சேகா ஹரின் பெர்னாண்டோவை இரகசிய இடமொன்றில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் பொன்சேகாவை ஆபாச வார்த்தைகளால் தாக்க முற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு மோதல் சமரசம் செய்யப்பட்டது.