சீன கட்டட விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவின் சாங்ஷா நகரில் கடந்த வாரம் நேரிட்ட கட்டட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53 என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது,

சாங்ஷாவில் கடந்த மாதம் 29-ஆம் தேதி இடிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து இதுவரை 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துப் பகுதியிலிருந்து 10 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

கட்டடம் இடிந்து விழுந்த பிறகு மாயமான அனைவரும் சடலமாகவோ, உயிருடனோ மீட்கப்பட்டுவிட்டனா்.

எனவே, கட்டட இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களை தேடும் பணிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன என்றாா் அவா். இந்த விபத்து தொடா்பாக 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.