பிரித்தானிய உயர்ஸ்தானியரை சந்தித்த ரணில்! பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய்வு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுத்திய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், சர்வதேச நிதிக்கட்டமைப்புக்களின் நிதியுதவி உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்திய திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான தமது விருப்பத்தைத் தெரியப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.