ஶ்ரீலங்காவில் மீண்டும் உயரப்போகும் எரிபொருள் விலை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலைவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை 124 டொலர்களை தாண்டியது.

கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

இலங்கையிலும் விலை அதிகரிக்கும்
எவ்வாறாயினும், உலக சந்தையின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என துறைக்குப் பொறுப்பான அமைச்சு அறிவித்துள்ளதால் இந்த மாதம் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.