பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்று (28) நள்ளிரவு முதல் ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாகும்.