மின்னல் தாக்கம் தொடர்பிலான எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow & Share




