IMF அங்கீகாரத்தால் இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகள், நிலையான மீட்சியை நோக்கிய முன்னேற்றத்தைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் அரச வருமானத் திரட்டல் ஆகியன எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துள்ளன,நாட்டின் பொருளாதாரச் செயற்திறன் முன்னரே கணிக்கப்பட்டதை விட வலிமையாக உள்ளமை இந்த இணக்கப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Follow & Share




