யூரியா உர விநியோகத்தில் புதிய மாற்றம்! தனியார் நிறுவனங்களுக்கு அரசின் அனுமதி

யூரியா உர விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த வாரத்திற்குள் நாட்டில் நிலவிய உரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் மிகுந்த உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால், உரத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பொய்யான மாயையை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் தேவையான அளவு உரம் இருப்பதாகவும், வரவிருக்கும் பெரும் போகத்திற்காக தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் உர விநியோக அமைப்பை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




