“பசுமை வழித்தடத்தில்” சிக்கிய 4.8 மில்லியன் சிகரெட்டுகள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி கைது..!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், 4.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கைப் பயணி ஒருவர் இன்று (13) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான இவர், இன்று அதிகாலை 02.50 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா நிறுவனத்தின் G9-587 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அறிவிப்பு தேவையில்லாத “பசுமை வழித்தடம்” ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் சிக்கியுள்ளார்.
அவரிடமிருந்து “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” வகையைச் சேர்ந்த 32,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 160 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பயணியை சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




