LATEST
வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!
உள்ளூர்

அடிப்படை உரிமைகளில் திருத்தம் வேண்டும் – சஜித்!

June 21, 2026 · Claude

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு, 48 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹீமோ டயாலிசிஸ் இயந்திரமொன்றை கையளிக்கும் நிகழ்வு இன்று (21) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, வாழ்வாதாரத்திற்கான உரிமை, கைத்தொழில்களுக்கான உரிமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்பன அடிப்படை என்பன உரிமைகளாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான தீர்மானங்களை இதற்கு முன்னமே எடுத்துள்ளது. 

தேர்தல் கொள்கை அறிக்கைகளில் கூட இவற்றை காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நமது நாட்டு அரசியலமைப்பில் பிரஜைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதம் விவரிக்கப்பட்டுள்ளன. 

அதன் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அதன்கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தாலும் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகள் மட்டுமன்றி வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப்படவில்லை. 

இவை அரசியலமைப்பின் 6 ஆம் அத்தியாயத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந்த 6 ஆம் அத்தியாயத்திலுள்ள உரிமைகளை பிரஜைகளால் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது. 

எனவே அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் தற்போதுள்ள உரிமைகளுக்கு மேலதிகமாக, இலவச சுகாதாரம் மற்றும் கல்வி, வாழ்வாதாரத்திற்கான உரிமை, கைத்தொழில்களுக்கான உரிமை மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் என்பன அடிப்படை உரிமைகளாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

Explore More ›