LATEST
கண்டி எசல பெரஹெரா – விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்! ஆசியக் கோப்பை 2026 – இலங்கையின் 15 பேர் கொண்ட மகளிர் அணி அறிவிப்பு! நாட்டில் டெங்கு நோயாளர்கள் 91 ஆயிரத்தை கடந்தனர்! ரூ.8 லட்சம் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்? இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான எதிர்பார்ப்பு – மத்திய வங்கி! மத்திய கிழக்கில் நீடிக்கும் பணி – அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடும் அழுத்தம்! வத்தளை ஹோட்டல் துப்#பாக்கிச் சூ#டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது! ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை! கண்டி எசல பெரஹெரா – விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்! ஆசியக் கோப்பை 2026 – இலங்கையின் 15 பேர் கொண்ட மகளிர் அணி அறிவிப்பு! நாட்டில் டெங்கு நோயாளர்கள் 91 ஆயிரத்தை கடந்தனர்! ரூ.8 லட்சம் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்? இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான எதிர்பார்ப்பு – மத்திய வங்கி! மத்திய கிழக்கில் நீடிக்கும் பணி – அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடும் அழுத்தம்! வத்தளை ஹோட்டல் துப்#பாக்கிச் சூ#டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது! ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை!
உலகம்

மத்திய கிழக்கில் நீடிக்கும் பணி – அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கடும் அழுத்தம்!

August 14, 2026 · National Tamil LK

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உள்ள சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகவும், கப்பலில் உள்ளவர்களின் மனநலம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் இராணுவ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இருப்பினும், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத் நேற்று (14) கூறுகையில், கப்பலின் நிலைமை குறித்த செய்திகள் முழுமையாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

250 நாட்களுக்கும் மேலாக பயணிக்கும் இந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவிலிருந்து தென் சீனக் கடலுக்குப் புறப்பட்டது. 

பின்னர் பெப்ரவரியில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக இது மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. 

ஆரம்பத்தில் மே மாதத்துடன் முடிவடைய வேண்டிய இவர்களின் சேவைக்காலம், பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட காலம் பணிக்கமர்த்தல் மற்றும் ஏனைய விடயங்களால் அதன் பணியாளர்கள் பாரிய மன அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

எனினும் திரும்பும் திகதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முன் திட்டமிடப்பட்ட சுழற்சி முறையின்படி, இக்கப்பலுக்குப் பதிலாக ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் கப்பலை அனுப்ப அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

Explore More ›