கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையே இதற்கு காரணமாகும்.
சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீரானதன் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்படும்.
இதேவேளை உயர்தரப் பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்களில் பரீட்சை செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Follow & Share




