பயணிகளுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதையும் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட எதிர்பார்த்துள்ள விமானப் பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான நிலையைப் (Flight Status) பரிசோதித்துப் பார்த்துவிட்டு விமான நிலையத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறில்லையெனில், 1979 என்ற அவசரத் தொலைபேசி எண்ணுக்கோ அல்லது +94 117 77 1979 என்ற எண்ணுக்கோ அழைத்துத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
Follow & Share




