ஹிருணிகா மீதான வழக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 மார்ச் மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற பெண் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக வழக்கு மார்ச் 16ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Follow & Share




