கம்பன் கழகத்தின் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மட்டக்களப்பில்!

அகில இலங்கைக் கம்பன் கழகம் பெருந்தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் அவர்களால் கிழக்கிலங்கை மக்களுக்குத் துணை புரிவதற்காக ரூபாய் மூன்று இலட்சத்திற்கான காசோலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வழங்கப்பட்டது.
இவ் அனர்த்த நிவாரண தொகையில் இருந்து மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.



Follow & Share




