மிரிஸ்ஸ கடலில் நீராடிய வைத்தியர் நீரில் மூழ்கி பலி

மிரிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நேற்று (25) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய வைத்தியரை பிரதேசவாசிகள் மீட்டு மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய 49 வயதுடைய வைத்தியர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




