ஜப்பானில் அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்.

ஜப்பானில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 26 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதுடன், சம்பவ இடத்தில் பெரும் தீப்பற்றலும் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவில்லாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் பயணிகள் போக்குவரத்து, பேருந்துகள், லாரிகள் மற்றும் பல சிறிய மோட்டார் வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஜப்பான் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




