எல்ல ஒடிஸி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட எல்ல ஒடிஸி சுற்றுலா ரயில் இன்று (07) முதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பேவெலவிலிருந்து பதுளைக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், பயணிகளின் தேவையைப் பொறுத்து எதிர்காலத்தில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
Follow & Share




