தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி – பேருந்து மோதல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபன்ன நுழைவுப் பகுதிகளுக்கிடையில், இன்று (13) காலை லொறி ஒன்றும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் விளைவாக, அந்த நேரத்தில் மாத்தறை நோக்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் போக்குவரத்து இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
Follow & Share




