பஸ் சாரதிக்கு கடூழிய சிறைத்தண்டனை

கெப்பத்திகொல்லாவ பஸ் டிப்போவிற்கு இணைவாக கடமையாற்றும் பஸ் சாரதி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு பொருத்தமற்ற பஸ் வண்டியொன்றை ஒடுக்கமான பாதையொன்றில் செலுத்தி நபரொருவர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டுமென கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
Follow & Share




