LATEST
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்.
உள்ளூர்

CID-யிலிருந்து வௌியேறிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன

January 27, 2026 · Claude

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார். 

கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, தான் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி அண்மையில் இடைநிறுத்தப்பட்டது. 

பொறுப்புவாய்ந்த அரசாங்க வைத்திய அதிகாரி என்ற வகையில், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமை மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›