அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியின் கீழ் இதற்காக ரூ.2.5 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




