LATEST
கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!
உள்ளூர்

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

February 21, 2026 · Claude

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த மற்றும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.

1999ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் போது சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டது. 2000மாம் ஆண்டுக்கு பின்னர் அது உலகளவில் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது.

நிலையான சமூக கட்டியெழுப்பலுக்கு கலாசார மற்றும் பல் மொழி கலாசாரம் அத்தியாவசியமானதென யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு தினத்தை கொண்டாடுவதற்கான முதல் யோசனையை பங்களாதேஸ் முன்வைத்திருந்தது.

குறித்த நாடு தாய்மொழியை பாதுகாப்பதற்காக முகம்கொடுத்த வரலாற்று அனுபவங்கள் மற்றும் மொழி சார்ந்த பல்வேறு விடயங்கள் உட்பட பல் கலாசாரத்திற்கென அந்நாட்டு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

1952ம் ஆண்டு அந்நாட்டு அரசு உர்து மொழியை தேசிய மொழியாக அறிவிக்க எடுக்க தீர்மானத்திற்கு அந்நாட்டில் பாரிய எதிர்ப்பு அலைகள் ஏற்ப்பட்டன. இந்த போராட்டத்தில் பல மாணவர்கள் உயிர் தியாகம் செய்தனர். பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய மொழி உரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட குறித்த அர்ப்பணிப்பை நினைவுகூறும் வகையில் 1999ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி சர்வதேச தாய்மொழி தினமாக பெயரிடப்பட்டது.

Related Stories

Explore More ›