மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய கணவர்

புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் படுக்கையறையிலிருந்து மனைவியின் சடலம் கண்டடெடுக்கப்பட்டள்ளது. உயிரிழந்தவர் 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாரவில பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow & Share




