அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அவசரக்கூட்டம்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாஸ பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்றைய அவசரக் கூட்டத்தின் போது சுகாதார சேவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
Follow & Share




