50 ஆண்டுகள் கழித்து மனிதன் மீண்டும் நிலவுக்கு

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று (02) அதிகாலையில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர்.
நிலவைச் சுற்றி வருவதற்காக நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் நேற்றைய தினம்புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்வெளி வீரர்களால் இந்த விண்கலத்திற்கு ‘இன்டெக்ரிட்டி’ (Integrity) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த விண்கலத்தின் நிலவைச் சுற்றியான இந்த ஆய்வுப் பயணம் மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1972 ஆம் ஆண்டு இடம்பெற்ற அப்பல்லோ திட்டத்தின் இறுதிப் பயணத்திற்குப் பிறகு, நிலவை நோக்கிய மனிதர்களின் முதல் பயணம் இதுவாகும்.
Follow & Share




