ட்ரம்பின் எச்சரிக்கை பின்னர் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது .
அதன்படி, நேற்றைய தினம் 100 டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு பீப்பாய் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை, தற்போது 5 சதவீதம் வரை அதிகரித்து 106.29 டொலராகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் உயர்வடைந்து, ஒரு பீப்பாய் 104.29 டொலர் வரை அதிகரித்துள்ளது.
Follow & Share




