உரம் ஏற்றிய கப்பல் நாளை இலங்கைக்கு வருகை

25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் உருவாகியுள்ள உரப் பிரச்சினையை அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், யல பருவம் ஆரம்பமாகும் இவ்வேளையில் விவசாயிகளிடையே உரப் பிரச்சினை குறித்த கவலைகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது தேவையையும் விட அதிகளவில் சேற்று உரம் மற்றும் பண்டி உரம் கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யூரியா உரம் தொடர்பில் ஒரு சிறிய சிக்கல் காணப்படலாம் என்றாலும், தற்போது நாட்டில் ஒரு இலட்சம் தொன்களுக்கு நெருக்கமான கையிருப்பு உள்ளதாகவும், நெற்செய்கைக்குத் தேவையான 80,000 தொன்களுடன் ஒப்பிடுகையில் இது போதுமானது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.




