இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் புதிய திருப்பம்!

இலங்கையில் தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் அடுத்த வாரத்திற்குள் தீர்க்கமான மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேவைப்பட்டால், தற்போதைய நிர்வாகக் குழு பதவியிலிருந்து விலகி, இடைக்காலக் குழுவொன்றுக்கு இடமளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறான சூழலில், 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகம் அமையும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) நிதியுதவிகள் நிறுத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
Follow & Share




