இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

இலங்கை 2025 ஆம் ஆண்டில் 38,210 மெட்ரிக் டொன் பாம் எண்ணெயையும், 33,696 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெயையும் இறக்குமதி செய்துள்ளதாக பேராசிரியர் அசோக நுகவெல தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் 34,708 மெட்ரிக் டொன் பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025 இல் அது 38,210 மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டில் பாம் எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இலங்கை 140,022 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
மேலும், உலக சந்தையில் தற்போது பாம் எண்ணெய் ஒரு மெட்ரிக் டொன் சுமார் 1,100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
பாம் செய்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாடு பாரிய வருமானத்தை இழந்துள்ளதாக பேராசிரியர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Follow & Share




