LATEST
அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்!
உள்ளூர்

ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!

June 30, 2026 · Claude

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு அண்மையில் கூடியிருந்தது. 

இதன்போது, குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டதுடன், இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டது. 

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை கூட்டத்தின் பின்னர், குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதேவேளை, உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக நீதிச் சேவைச் சங்கமும் பொது சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானித்துள்ளது. 

அந்தச் சங்கத்தின் செயற்குழுவினால் எதிர்வரும் 11ஆம் திகதி இந்த விசேட பொது சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

Explore More ›