இருதரப்பு அரசியல் கலந்தாய்வு : ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கு இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் கொழும்பில் நடைபெறவுள்ளன. இதற்காக ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) 31 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளில் பங்கேற்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். மார்ச் 31 ஆரம்பமாகவுள்ள இந்த உயர்மட்டக் கலந்தாய்வின் போது, இரு நாட்டு அதிகாரிகளும் பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளனர்.
இந்தக் கலந்தாய்வானது, ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும், ரஷ்யாவுடனான அதன் தொடர்ச்சியான நட்புறவையும் மீள உறுதிப்படுத்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.




