இலங்கை மின்சார சபை கடன் 11 பில்லியனைத் தாண்டியது – இன்று நாடாளுமன்றத்தில்!

இலங்கை மின்சார சபையின் நிதி நிலை குறித்து நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், இலங்கை மின்சார சபை அரச வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள மொத்த நிலுவையிலுள்ள கடன் 11 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பெரும் கடன் சுமை மின்சார சபையின் நிதி மேலாண்மைக்கு கடுமையான சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச துறையின் முக்கிய நிறுவனமாக இருக்கும் மின்சார சபையின் இந்த நிலைமை, எதிர்கால மின்சார கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




