குவைத்திலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர் அவதானம்

குவைத்திலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் லக்ஷித ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதனால் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு இல்லையென அவர் உறுதி செய்துள்ளார்.
இதன்காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் குறித்து பீதியடையத் தேவையில்லையென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Follow & Share




