டுபாய் இஷாரவின் சகாக்கள் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தும் டுபாய் இஷார என்ற நபரின் சகாக்கள் மூவர் கம்பளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் மூலம் கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொலுவ, கெலிஓய, பேராதணை, வெலிகல்ல உள்ளிட்ட பகுதிகளில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து போதைப்பொருள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Follow & Share




